Wednesday, May 12, 2010

லூசாப்பா நான்


ஒரு நண்பர் தன் அப்பா மனநல மருத்துவம் வைத்திருந்தாகவும் அங்கு நடந்த சில காமெடிகளை மிக வர்ணனையுடன் கூறிகொண்டிருந்தார்.

உலகில் மிகச்சிறிய சதவிகிதம் போக அனைவருமே பைத்தியம் தான். அனால் அதை பெரும்பாலானோர் செய்யும் பொழுது அதை பைத்தியம் என்று எடுத்துக்கொள்வதில்லை. அதாவது வீட்டை பூட்டிவிட்டு சிறிது தூரம் போனபின்னர் ஓடி வந்து பூட்டினோமா இல்லையா எனப் பார்ப்பவர் பலர். இதை அநேகம் பேர் செய்வதால் சரி சரி விடு நம்ம பண்ணாததான்னு சுளுவா எடுத்துக்கறோம் .

அவர் இன்னும் சில விஷயங்கள் கூறியது மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் ஒரு கைதேர்ந்த இசையமைப்பாளர். " என்னை இசையே இல்லாத உலகத்தில் கொண்டுவிட்டால், நானும் பைத்தியங்களில் ஒருவன் என்பது நிச்சயம் என்றார்". அப்போ நாம பார்டர்க்கு இந்த பக்கமா அல்லது அந்த பக்கமா அப்படிங்கறது தான் பேச்சே.

சொல்லுறவர் சொல்லிட்டுப் போயிட்டார். இருந்தாலும் நிறையப் பேரின் குடும்பப் பிரச்னைக்கு இப்படி தான் பிரச்சனையை தொடங்குதோ?

ஒரு பெண் தன் திருமணத்தின் முன் செய்து கொண்டிருந்த சில நல்ல விஷயங்களை, திறமை வெளிக்காட்டும் விஷயங்களை திருமணத்திற்குப் பின் இடமாற்றத்தால், புதிய குடும்பச் சூழலால், பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு செயல் படுவதால் தனக்கு விருப்பப்பட்ட ஒரு விஷயம் தள்ளி வைக்கப்படுகிறது.

இன்ஜினியரிங், மருத்துவம் முடித்த நிறைய பெண்கள் வீட்டில் அடங்கியவரை வெளிநாடுகளில் காணலாம். இதற்கு சீட்டு கிடைக்கப் பட்ட பாடென்ன, படிக்கப் பட்டப் பாடென்ன, செலவுகள் என்னன்ன... அத்தனைக்க்காகவும் சுறுசுறுப்பாக ஓடியவர்களை டிவி இருக்கு, பிரிஜ் இருக்கு, போன் இருக்கு, நெட் இருக்கு, வாஷிங் மெஷின் இருக்கு மைக்ரோவேவ் இருக்கு, சுகமாய் இருக்கலாம் என்றால் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள்.

அப்போ பார்டர் தாண்டிய பைத்தியம் தானே அவள். மாட்டுனது அவள் கணவன். அவர் குடுமியப் பிடிச்சு ஆட்டுரதுல , சிலபேர் என்னடா இது சரியான லூச கட்டிகிட்டோம்னு புலம்புகிறவர்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் இவைகளைப் பற்றி சரியாக சிந்திக்கக் கூட நேரமில்லை. செபரஷன் அல்லது டிவோர்சில் சென்று முடிகிறது வாழ்க்கை பலருக்கு. வாழ்க்கை ரீசெட் ஆனவுடன் வழக்கம் போல் ஆகிவிடுகிறார்கள்.

இப்போ பாத்ததெல்லாம் பார்டர்க்கு முன்னும் பின்னும் தான. பார்டர்ல இருக்கிறவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சுப் பாருங்க. இதுக்கு பேர் "bipolar syndrome".

ஒரு விஷயத்தில் அபரிமிதமான திறம் வாய்ந்தவர்கள் , கற்பனை ஆற்றல் படைத்தவர்கள் இதில் பாதிக்கபட்டவர்களாம்.

இவ்வளவு பெரிய பதவியில இருக்குறாரு, இப்படி லூசு மாறி பேசுறாரே என அநேகம் திறம் வாய்ந்தவர்களை கமெண்ட் செய்வதுண்டு. இன்னும் சிலரை நாம் கூறியிருப்போம், "நல்ல தெறமையானவருய்யா, கோபம் மட்டும் வந்தா வாயில என்ன வருதுன்னு தெரியாம சகட்டுமேனிக்கு திட்டிபுடுவாருன்னு ".

இவங்க ரெண்டு விதமான மன எல்லையைத் தொடுறவங்க. ரொம்ப நல்லா அன்பாவும் இருப்பாங்க திடீர்னு ஆக்ரோஷமாக மாறிடுவாங்க .

Famous personalities நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு.

Writer - Charles Dickens

Actor - Jim Carey

Dancer - Alvin Alley

U.S. President - Abraham Lincoln

comedian, actor, writer, artist - Jonathan Winters


இன்னும் பலர்.

நம் நாட்டு திறமைசாலிகளை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். இந்த ஆட்டைக்கு நான் வரல.