Wednesday, December 22, 2010

குழந்தைப் பாலியல் சீண்டல்கள்




தலைப்பைப் பார்த்ததுமே என் குழந்தைக்கா ச்சே! ச்சே! அப்படின்னு மனசு லேசா அறிச்சிருக்குமே.

அச்சச்சோ! உங்க நினைவை எங்கோ கொண்டு போயிடாதீங்க. அப்படியே வீட்டுக்குள்ளேயே கொண்டு வாங்க. ஆமாங்க இப்படி பட்ட துயரத்தை பெற்றோர்தான் வி(வே)லை கொடுத்து வீட்டிலேயே வாங்குறோம்.

" என் குழந்தையைப் பார்த்துகோங்க" ன்னு சொல்லிட்டு 'டாட்டா' கிளம்பும் பெற்றோரா! கவனம் தேவை.

பாலியல் சீண்டல்களால் அவஸ்தை படும் குழந்தைகள் வெகு இயல்பாக பெற்றோரிடம் நடந்து கொண்டாலும், ஆழமான மன இறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். தன்னால் எதிர்க்க முடியாததால் பற்களை கடித்துக்கொண்டும், கடும் கோபம் மற்றும் வெறுப்பு நிறைந்து குழந்தைகள் காணப்படுகிறார்கள்.

இதில் ஆகா! எனக்கு ஆண் பிள்ளை அப்படீன்னு ஓரத்துல என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. ஆணென்ன! பெண்ணென்ன! யாரைத்தான் விட்டு வைக்கிறாங்க.


இரண்டு மில்லியன் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகுறாங்கன்னு உலகக் கணக்கெடுப்பு (WHO) சொல்லுது. இதுல சொல்லாமல் விட்டவர்களை கணக்கெடுத்து மாளாது.

இப்படி ஏன் நடந்துக்குறாங்கன்னு கோபம் வருதுல்ல? குழந்தைகளைச் சீண்டுபவர்களுக்கு, தனக்கும் சிறு பிள்ளையில் இது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம் என்பது மனொரீதியாக சொல்லப்படும் காரணம்.

இதையும் தாண்டி நம் குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை பற்றி பார்ப்போம்.

  • கல கல என ஓடித்திரிந்த குழந்தை வயதுக்கு மீறிய வெட்கத்தை காண்பிக்கிறதா?
  • நன்றாக படிக்கும் குழந்தை படிப்பில் நாட்டம் குறைந்து காணப்படுகிறதா?
  • காரணம் கூற முடியாமல் வெட்டுகள், காயங்கள் இருக்கிறதா?
  • அபரிமிதமான பசியால் மிகுதியான உணவை குழந்தை நாடுகிறதா?
(குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.)
  • வயதுக்கு மீறியவர்களுடன் நெருக்கமான நட்பு.
  • காரணமற்ற விலை உயர்ந்த அல்லது நிறைய விலை குறைந்த பரிசுப்பொருட்கள் ஒருவரிடம் இருந்தே கிடைக்கிறதா?
(வேண்டாம் என்று சொல்ல குழந்தைக்கு பழக்கி விடுங்கள்)


பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிகவும் குற்ற உணர்ச்சியில் தளைத்து விடுகிறார்கள். உறவினராக இருக்கும் பட்சத்தில் காண்பித்துக் கொடுக்க மனமின்றி மனதின் ஆழத்திலே புதைத்து விடுகிறார்கள். அவர்களிடம் நாம் உணர்ச்சி வசமாகாமல் நயமாகப் பேசுவது குழந்தைகளின் மனதிற்கு இதம் தரும்.

டீன் ஏஜ் குழந்தைகள் அதிகம் முறையிடுவது, "அம்மா ரொம்ப சந்தேகப்படுறாங்க" ன்னு. இதில் தாயின் அனுபவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதெல்லாம் சொல்லி மனச ரொம்ப கசக்கிட்டேனோ?

நடந்தவைகளை மறந்து குழந்தைகளின் மனம் சிட்டு குருவி போல் சுதந்திரமாய் பறக்கட்டுமே!